Pages


Tuesday, December 28, 2010

அழியா அசைவுகள்

* என்னவளே!...
   என்னமோ தெரியவில்லை
   எனக்கு உன்னிடம்
   அத்துனையும் பிடித்துவிட்டது
   அப்படியே...

* அன்பே!...
   அன்றொருநாள் எனக்கோர்
   அழைப்பு வந்தபோது,
   ஆனந்தமாய் அரட்டையடித்தேன்‍ ஓர்
   அழகான மங்கையோடு
   அதன்பின்தான் நானறிந்தேன்
   அவள் என்னன்னை எனக்காகப்
   பார்த்த பெண் நீ என்று..
 
*அழகே!...
    இன்றும் புரியவில்லையெனக்கு
    என் அகத்தை தொட்டது
    உன் அறிவான அந்த வார்த்தைகளா? இல்லை
    உன் பரிவான அந்த பாசமா?